Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அம்பத்தூர்:பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு அயப்பாக்கம் வர்த்தகப் பிரிவு மாநிலச் செயலாளர் செல்வகுமார் தலைமையில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. பாரத பிரதமர் நரேந்திர மோடியின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ பார்வதி அம்மாள் திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பா.ஜ.க. கட்சியின் வர்த்தக மாநிலச் செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ பார்வதி அம்மாளுக்கு மஞ்சள், பால், இளநீர் உள்ளிட்ட பொருட்களை ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் அம்பாளுக்கு தீபாராதனை காண்பித்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கிழக்கு மாவட்ட தலைவர் ராஜா கலந்துகொண்டு சுமார் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில், மாவட்ட துணைத்தலைவர் முத்துராஜ் மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் சண்முகம் வர்த்தகப் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சமூக ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் கற்குவேல் ராஜா மற்றும் மகளிர் அணி மாவட்ட ஒன்றியம் உட்பட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்