Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

70 அடி உயர கம்பத்தில் பா.ஜ.க கொடி ஏற்றினர்

செப்டம்பர் 18, 2020 07:07

திருவள்ளூர்:பிரதமர் மோடியின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரவாயலில் 70 அடி உயர கம்பத்தில் பா.ஜ.க கொடி ஏற்றப்பட்டது. பாரத பிரதமர் நரேந்திர மோடி எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் மதுரவாயல் மேம்பாலம் அருகே சுமார் 70 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் புதிதாக அமைக்கப்பட்டு இருந்தது. இதனை தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் புதிதாக அமைக்கப்பட்டு இருந்த 70 அடி உயர கொடிக் கம்பத்தில் பா.ஜ.க. கொடியை ஏற்றிவைத்தும், கல்வெட்டை திறந்து வைத்தும் அங்கிருந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பாரத பிரதமரின் எழுபதாவது பிறந்த நாளை குறிக்கும் வகையில் 70 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்