Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
வாணியம்பாடி:திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்லேகம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம்(57) இவர் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம்போல் பணி முடித்துவிட்டு தன்னுடைய மகளின் நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் கார்டு) விண்ணப்பம் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி சென்று விட்டு மீண்டும் ஆம்பூரை நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது பெருமாள்பேட்டை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் மீதுள்ள தடுப்பு சுவரில் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி நகர போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.