![](admin/uploads/.5eaffbd305d125.59524242.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஆவடி:அயப்பாக்கம் ஊராட்சி மன்றம் வளாகத்தில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பெரியாரின் 142 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் பல்வேறு புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொண்ட தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமியின் 142வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஆவடி அருகே அயப்பாக்கம் ஊராட்சி மன்றம் வளாகத்தில் தந்தை பெரியாரின் திருஉருவப் படத்திற்கு அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி மாலையிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் வினோத், வார்டு உறுப்பினர் சண்முகம், ஊராட்சி செயலாளர் சசிகலா உட்பட தி.மு.க. கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.