Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிளஸ்-2 தேர்வு முடிவு ஏப்ரல் 19-ந்தேதி வெளியாகும்

மார்ச் 20, 2019 06:08

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தின் படி இந்த தேர்வு நடத்தப்பட்டது. 

பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ- மாணவிகள் எழுதினார்கள். 2941 தேர்வு மையங்களில் பிளஸ்-2 தேர்வு நடந்தது. 

கணிதம், விலங்கியல், வணிகவியல், வேதியியல் ஆகிய பாடங்களை தவிர மற்ற பாடங்கள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். 

பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த பணி ஏப்ரல் 11-ந்தேதி முடி வடைகிறது. அதன்பிறகு ஏப்ரல் 19-ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

தலைப்புச்செய்திகள்