Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாட்றம்பள்ளியில் 4 வீடுகளில் கொள்ளை: தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

செப்டம்பர் 18, 2020 07:45

திருப்பத்தூர்:நாட்றம்பள்ளி அருகே அடுத்தடுத்து 4 வீடுகளின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் வைத்திருந்த பால், பழம் சாப்பிட்டுவிட்டு சாவகாசமாக நகை, பணம், இருசக்கர வாகனம் திருடி சென்ற மர்ம நபர்கள் அரங்கேறி வரும் தொடர் திருட்டால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகாவிற்கு உட்ப்பட்ட வேட்டப்பட்டு கூட்ரோடு மற்றும் டோல்கேட் அருகில் அடுத்தடுத்த 4 வீட்டின் பூட்டை உடைத்து திருடி சென்ற திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது  நாட்றம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட வேட்டப்பட்டு பகுதியை சேர்ந்த காய்  வியாபாரி குப்புசாமி. இவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் வைத்திருந்த 25 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போனது.

அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (25) இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது அதே பகுதியில் கம்பி கட்டும் தொழில் செய்தது  வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு அவரது அக்கா வீட்டிற்கு சென்று விட்டு காலை வந்து பார்க்கும்போது  வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 1.50 லட்சம் ரொக்கம் மற்றும் ஆதார் அட்டை  மற்றும் வெளிநாட்டு பணம் எடுத்து கொண்டு அதுமட்டுமின்றி பால் பழம் ஆகியவை சாவகாசமாக சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளனர். அதே போன்று நாட்றம்பள்ளி டோல்கேட் பகுதியை சேர்ந்த கரிகாலன் வீட்டின் பூட்டை உடைத்து 1 சவரன் தங்கநகை மற்றும் 500 கிராம் வெள்ளி கொலுசு ரொக்கம் 20 ஆயிரம் கொள்ளை அடித்தனர். அதே பகுதியை சேர்ந்த திருப்பதி இவரது வீட்டிற்கு முன் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தை திருட்டி சென்றுவிட்டனர் இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீஸார் திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர் நான்கு வீடுகளில் அடுத்தடுத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்