Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூர்:பிரதமர் மோடியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூரில் புதிதாக பா.ஜ.க. அலுவலகத்தை திறந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பா.ஜ.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் கணியாம்பூண்டி பகுதியில் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் பா.ஜ.க. கொடியை ஏற்றி வைத்து புதிதாக பா.ஜ.க. அலுவலகத்தை திறந்து வைத்தார். மேலும் அப்பகுதி பொது மக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கி பிரதமர் மோடியின் பிறந்த நாளை கொண்டாடினர். கணியம்பூண்டி பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பா.ஜ.க. அலுவலகம் மூலமாக அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அரசின் சலுகைகள் மற்றும் சேவைகளை பெறுவது தொடர்பாக உதவி செய்யப்படும் என தெரிவித்தனர்.
தஞ்சை திருபுவனத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தஞ்சை வடக்கு மாவட்டம், பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருபுவனத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினத்தை முன்னிட்டு மாநில செயற்குழு உறுப்பினர் உமாதேவி தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில் சேவாபாரதி மாவட்ட அமைப்பாளர் சுதர்சன், ஒன்றிய தலைவர் கிளி ராஜேந்திரன், ஊரக ஒன்றிய தலைவரும், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான குருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், கண்ணன், சுரேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.