Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ஜ.க. சார்பில் 70 அடி உயர கொடிக்கம்பம் நெடுஞ்சாலைத்துறை இடித்து தரைமட்டம்

செப்டம்பர் 18, 2020 08:07

மதுரவாயல்:பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்றுமுன்தினம் மதுரவாயல் மேம்பாலம் அருகே 70 அடி உயர கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டை தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் திறந்து வைத்தார். அதன்பின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிலையில் கொடி கம்பம் மிக உயரமாக இருப்பதாகவும், ஆபத்து விளைவிக்கும் வகையில் உரிய அனுமதி இல்லை என்பதால் நேற்றுமுன்தினம் நள்ளிரவு தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு இடித்து தரைமட்டமாக்கி அமைக்கப்பட்டிருந்த 70 அடி கொடிக்கம்பத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். பா.ஜ.க. சார்பில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் ஒரே நாளில் இரவோடு, இரவாக அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பா.ஜ.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் அந்த பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க மதுரவாயல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்