Saturday, 5th October 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மசோதாக்கள் மீது காரசாரமான விவாதம் நடைபெறுகிறது.
பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிரோமணி அகாலி தளம் உறுப்பினர் நரேஷ் குஜ்ரால் பேசும்போது, ‘இந்த மசோதாக்களை தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும், இதனால் அனைவரின் கருத்துக்களையும் கேட்க முடியும். பஞ்சாப் விவசாயிகள் பலவீனமானவர்கள் என்று நினைக்க வேண்டாம்’ என்றார்.