Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆம் ஆத்மி கட்சி பசுவை அரசியலாக்குகிறது; தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க பா.ஜ.க. முடிவு

மார்ச் 20, 2019 06:55

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை வேட்பாளர் ராகவ் சத்தா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், வீடு வீடாக சென்று பா.ஜ.க. பிரசாரம் செய்கிறது என பதிவிட்டு, வீடு ஒன்றின் வாசலில் பசு மற்றும் கன்று நிற்பது போன்ற புகைப்படத்தினையும் இணைத்துள்ளார்.  இதனை முதல் மந்திரி கெஜ்ரிவால் லைக் செய்துள்ளார். 

இதுபற்றி டெல்லி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான பா.ஜ.க.வை சேர்ந்த விஜேந்தர் குப்தா கூறும்பொழுது, இந்திய தேர்தல் ஆணையத்திடம் சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளோம்.  பசு நல்லிணக்கத்தின் அடையாளம்.  இதனை ஆம் ஆத்மி அரசியலாக்குகின்றது.  சமூகத்தில் பதற்றத்தினை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.  இதுபற்றி ஆணையத்திடம் எடுத்து கூறுவோம் என கூறியுள்ளார். 

இந்த டுவிட்டர் பதிவு தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுவது ஆகும்.  இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் டெல்லி பா.ஜ.க. நாளை புகார் அளிக்கும் என தெரிவித்து உள்ளார்.

தலைப்புச்செய்திகள்