Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜெயிலே எங்களுக்காக கட்டியது தான்:எங்களுக்கு பயமில்லை: செல்லூர் ராஜூ

செப்டம்பர் 21, 2020 06:01

மதுரை:''தி.மு.க.வினர் எத்தனையோ பொய் வழக்கு போட்டு எங்களை ஜெயிலுக்கு அனுப்பினார்கள். ஜெயிலே எங்களுக்கு தான் கட்டியது- எங்களுக்கு பயமில்லை என்று செயல்பட்டோம்,'  என மதுரையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். மதுரை மாவட்டம் பரவை பகுதியில் தனியார் திருமண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்களை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு வழங்கினார். பின்னர் 

அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:
தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. அ.தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு பதவி தேடி வரும். தி.மு.க.வில் குடும்ப அரசியல் தான். கலைஞருக்கு பிறகு ஸ்டாலின், தற்போது, உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலினை நாடினால் தான் தி.மு.க.வில் பதவி கிடைக்கும் என்று தி.மு.க.வினர் உதயநிதி ஸ்டாலினை சுற்றி வருகிறார்கள்

அ.தி.மு.க.வை ஒழிக்க தி.மு.க. பல வேலைகளை செய்தது. என் மீது கூட தி.மு.க வினர் முன்னர் தி.மு.க. ஆட்சியில் பொய் வழக்கு பதிவு செய்து என்னை ஜெயிலில் போட்டனர். ஜெயிலே எங்களுக்கு தான் கட்டியது, எங்களுக்கு ஜெயில் குறித்த பயம் இல்லை. என்று தொடர்ந்து கட்சி பணியினை செய்தேன். இன்று நல்ல நிலைமையில் இருக்கேன். கடந்த 2011 நீட் தேர்வை கொண்டு வந்த தி.மு.க.வினர் தான் இப்போது நீட் தேர்வை பற்றி பேசி குறை கூறி வருகிறார் ஸ்டாலின். காவிரி, இலங்கை தமிழர் உள்பட தமிழகத்தில் நடந்த மக்கள் விரோத திட்டங்கள் எல்லாம் தி.மு.க. ஆட்சியில் நடந்தவை தான்.

அ.தி.மு.க. ஆட்சியில் தான் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படுகிறது. ஆனால் தி.மு.க.வின் ஜால்ராவாக ஊடகங்கள் இப்போது செயல்படுகின்றன. தி.மு.க. ஆட்சியில் மதுரையில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய முடியாத நிலை இருந்தது. எங்கு ரவுடியிசம் இருந்தது.
இவ்வாறு அமைச்சர் செல்லுார் ராஜூ பேசினார்.

தலைப்புச்செய்திகள்