Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அழுகிய நிலையில் ஆண்பிணம் கண்டுபிடிப்பு

செப்டம்பர் 24, 2020 06:53

துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலிபுரம் அடுத்துள்ள சூக்லாம்பட்டி சேர்ந்த ஜெயராமன். இவரது தோட்டத்தின் அருகே துர்நாற்றம் வீசவே அருகில் சென்று பார்த்த பொழுது 35 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்த நிலையில் கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்து உப்பிலிபுரம் போலிசாருக்கு தகவல் அளித்தார்.

முசிரி காவல் துணை கண்காணிப்பாளர் பிரம்மானந்தம் உத்தரவின் பேரில் துறையூர் இன்ஸ்பெக்டர் குருநாதன் உப்பிலிபுரம் சப்இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அடையாளம் தெரியாத அளவில் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் போலீஸாரின் விசாரணை நள்ளிரவு வரை நீடித்தது. உடல் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பிணம் அழுகிய நிலையில் கிடந்ததால் அடையாளம் காணும் முயற்சியிலும் எதற்காக அங்கு வந்து இறந்தார்?. இயற்கையான மரணமா? என உப்பிலியபுரம் போலிஸார் விசாரணையை மேற்க்கொண்டுள்ளனர் .இது இப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்