Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சூர்யாவை அச்சுறுத்தும் பா.ஜ.க: சங்பரிவார் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குற்றச்சாட்டு

செப்டம்பர் 24, 2020 07:15

திருப்பூர்: நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்த சூர்யாவின் கருத்தோடு வாதிட திராணியற்ற பா.ஜ.க. சங்பரிவார அமைப்புகள் அவரை அச்சுறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது,''  என திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் குற்றம்சாட்டினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருப்பூர் கோம்பை தோட்டம் பகுதியில் நடைபெற்றது . இதில் மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் . பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே கருத்தோடு இருக்கும் நிலையில் மனுநீதி முறையில் ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க. மட்டும் மாறுபட்ட கருத்தோடு இருக்கின்றனர். நடிகர் சூர்யா என்பதையும் கடந்து மனித நேயமிக்க முறையில் நீட்தேர்வு எதிராக குரல் கொடுத்த நடிகர் சூர்யாவின் கருத்தோடு மோதிட துணிவில்லாத பா.ஜ.க. சங்பரிவார் அமைப்புகள் அவரை அச்சுறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகர் சூர்யாவை செருப்பால் அடிப்போம் என மிரட்டல் விடுத்த அர்ஜுன் சம்பத்திற்கு தமிழக மக்கள் அதே பாணியில் பதில் சொல்லத் தயங்கமாட்டார்கள்.  குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் பா.ஜ.க. அரசு தற்போது மௌனமாக இருந்து வரும் சூழ்நிலையில் அதை அமல்படுத்த முயலும்பட்சத்தில் மீண்டும் போராட்டம் நடைபெறும். இவ்வாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில செயலாளர் பைசல் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்