![](admin/uploads/.5e7f432b824846.15056061.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: திருச்சி மாவட்டம் நெற்குப்பையில் ஹிந்து சேனா சார்பாக பாரதபிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பாரதத்தின் தலைமகனும் பாரத பிரதமருமான மோடிபிறந்தநாளை முன்னிட்டு ஹிந்து சேனாவின் மாநில தலைவர் அருள்வேலன் உத்தரவின் படி மாநில பொதுச்செயலாளர் மணிவேல் தலைமையில் திருச்சி மாவட்டம் நெற்குப்பை கிராமப்பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவ , மாணவிகளுக்கு நோட்டு, பென்சில், பேனா போன்ற படிப்பிற்கு தேவையான பொருட்கள் வழங்கபட்டது.
இதில், மாவட்டதலைவர் ஆரோக்கிய ஜோசப் என்கிற அரசு, மாவட்ட துணை தலைவர் ராஜா, மாவட்ட செயலாளர் முத்துராமன், லால்குடி ஒன்றிய செயலாளர் வேணுகோபால், ஒன்றிய தலைவர் பரமசிவம், துணைத்தலைவர் முருகாணந்தம், துணைப் பொருளாளர் சின்னதுரை, செயலாளர் அரவிந்த் குமார், அமைப்பாளர் ரமேஷ், பொருளாளர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக நெய்க்குப்பை கிராமம் ஊராட்சி மன்ற தலைவர் நேரு லலிதா கலந்து கொண்டார். ஹிந்து மேலும் சேனா அமைப்பினர் பள்ளி மாணவ, மாணவிகளிடம் கொரோனா வைரஸ் அதிகம் பரவுவதால் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். தினந்தோறும் ஐந்து அல்லது ஆறு முறை கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். வெளியே செல்லும் போது முககவசம் கட்டாயம் அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.