Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எஸ்.பி.பி.யின் இசை பயணம்

செப்டம்பர் 25, 2020 06:19

* முதன் முதலாக எஸ்.பி.பி. திரைப் பாடலாகப் பாடியது `சாந்தி நிலையம்’ படத்துக்காக `இயற்கை எனும் இளைய கன்னி, ஏங்குகிறாள் துணையை எண்ணி’ தான். ஆனால், திரைக்கு முதலில் வந்தது `அடிமைப் பெண்’ படப் பாடலான `ஆயிரம் நிலவே வா’!
* பாடலைத் தவிர, நடிப்பிலும் அசத்தியவர். தெலுங்கு, கன்ன டம், தமிழ் என மூன்று மொழிக ளில் 50 படங்களுக்கு மேல் நடித் திருக்கிறார். `கேளடி கண்மணி’, `காதலன்’ இரண்டு, இன்றும் நினைவில் நிற்பவை!

* மூச்சுவிடாமல், `கேளடி கண்மனி’யில் `மண்ணில் இந்தக் காதல்’ `அமர்க்களம்’ பட `சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் மிகப் பெரிதாகப் பேசப் பெற்றவை. இன்றளவும் அவரது தனிக் கச்சேரியில் விரும்பிக் கேட்கப்படுகின்றன இந்தப் பாடல்கள்!
* எஸ்.பி.பி.-க்குப் பிடித்த பாடகர்கள் முகமது ரஃபி ஜேசுதாஸ், முகமது ரஃபியின் பாடல்களை விரும்பிக் கேட்பார். டி.எம்.எஸ். அண்ணா பாடிய எந்தப் பாடலிலும் அபஸ்ருதியைக் கேட்கவே முடியாது எனப் பாராட்டி மகிழ்வார்!

* எம்.ஜி.ஆரே விரும்பிக் கொடுத்த பாடல் `ஆயிரம் நிலவே வா’ அந்தப் பாடலுக்கு எஸ்.பி.பி. அழைக்கப்பட்டபோது, குளிர் காய்ச்சலில் இருந்தார். `ரெஸ்ட் எடு, நீ எத்தனையோ பேரிடம் எம்.ஜி.ஆர் பாடலுக்குப் பாடுகிறேன் எனச் சொல்லி இருப்பாய் மூணு நாளைக்குப் பிறகு நீயே வந்து பாடு!’ எனச் சொல்லி வாய்ப்பு கொடுத்தார்!
* பிடித்த இசையமைப்பாளர், இளையராஜாதான் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மீது மிகுந்த மரியாதை இருந்தாலும், `ராஜா... ராஜாதான்’ என்கிற கட்சி!
* ரஷ்யா தவிர, எஸ்.பி.பால சுப்ரமணியம் போகாத நாடுகளே பூமியில் இல்லை. `எப்படி அந்த கம்யூனிஸ்ட் பூமி விட்டுப் போச்சு’ என இப்போதும் அடிக்கடி சொல்லி குறைபட்டுக்கொள்வார்!

* சினிமாவில் இருந்தாலும் சினிமாக்காரகள் யாரும் இதுவரை வீட்டுக்கு வந்தது இல்லை. ஏனோ, இப்போதும் தனிமைதான் இவருக்கு விருப்பம். சினிமாவை யும் வீட்டையும் தள்ளித் தள்ளியே வைத்திருக்க விரும்புவார்!
* எஸ்.பி.பி இதுவரை ஆறு முறை தேசிய விருதுகள் வாங்கியி ருக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்குப் பாடல்களைப் பாடியதற்காகப் பெற்ற விருதுகள். `சங்கராபரணம்’,` ரூத்ர வீணா’, `ஏக் துஜே கேலியே’, `மின்சாரக் கனவு’ என இவர் பாடியதெல்லாம் ஒலி பரப் பாகாத நாளே இல்லை! நான்கு பல்கலைக்கழகங்களால் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டவர். மேலும் இந்திய அரசின் பத்மபூஷணன் விருதையும் பெற்றவர்.

* ஏக் துஜே கேலியே’’ படம் ஹிட்டுக்குப் பிறகு மும்பையில் ஒரே நாளில் 19 பாடல்கள் பாடியவர் இதுதான் எல்லாப் பாடகர்களையும்விட எஸ்.பி.பி-யின் ஆல் டைம் ரெக்கார்டு!
* இளையராஜாவும், எஸ்.பி.பி-யும் மிக நெங்கிய நண்பர்கள் இருவரும் `வாடா, போடா’ எனப் பேசிக்கொள்ளும் அழகு எல்லோரையும் வியக்க வைக்கும்!
* சுத்தமான சைவ உணவுப் பழக்கம், இவர் சாப்பிட எடுத்துக் கொள்கிற நேரம் ஐந்தே நிமிடங்கள். தயிர் சாதம்... இஷ்ட உணவு!
* இதுவரை 42,000 பாடங்க ளுக்கு மேல் பாடி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படகா, மராட்டி என 14 மொழிகளில் பாடுபவர்! கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார்.

* எஸ்.பி.பி. தன் குரலைப் பாதுகாக்க, எந்தச் சிறப்புக் கவனமும் மேற்கொள்வது இல்லை. குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், இனிப்பு என எல்லாம் சாப்பிடுவார்!
* மழை படத்துக்காக எஸ்.பி.பி. ஒரு பாடலை பாடினார். அவர் ரிக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு அடியெடுத்துவைத்து. பாடி வெளியேறியது எல்லாம்  12 நிமிடகளில் முடிந்துவிட்டது!
* கிரிக்கெட் விளையாட்டின் வெறியர் எஸ்.பி.பி. சச்சின் இவரது ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, தன் கையெழுத்திட்ட பேட் பரிசு அளித்திருக்கிறார்!
*எப்போதும் பிஸியாக பாடிக்கொண்டே இருந்தவர். பிறந்த நாளைக் கொண்டாடுவதில் விருப்பம் இல்லை!
* `முதல் மரியாதை’ படத்தில் சிவாஜிக்குப் பதிலாக நடித்திருக்க வேண்டியவர். பாரதிராஜா வற்புறுத்தியும் கடைசி நேரத்தில் எஸ்.பி.பி மறுத்துவிட்டார்!

*  எஸ்.பி.பி பிரமாதமாக வரைவார். மிக நன்றாகப் புல்லாங்குழல் வாசிப்பார். இரவுகளில் புல்லாங்குழல் இசை இவர் அறைவழி கசிவதை இன்றைக்கும் கேட்கலாம்! 
* எஸ்.பி.பி.யின் பள்ளித் தோழ ரான விட்டல், ஆரம்ப காலம் தொட்டு. இன்று வரை இவருடனே இருக்கிறார். திரையுலகின் ஆச்சர்ய  நண்பர்களாக இவர்களைக் குறிப்பிடுவார்கள். கால் ஷீட், உணவு, உடல்நலம் எல் லாம் பேணிக்காப்பது விட்டலின் பொறுப்பு!
* கடந்த 20 வருடங்களில் அதிகமான விமானப் பயணங்கள் மேற்கொண்டவர் என எஸ்.பி.பி-யைக் குறிப்பிடுகிறார்கள். மும்பைக்கும், பெங்களூருக்கும், ஹைதராபாத்துக்குமான அவசரப் பயணங்கள் அதிகம்!

தலைப்புச்செய்திகள்