Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போதை வஸ்து வாட்ஸ்ஆப் குரூப்: அட்மினே தீபிகா படுகோன் தானாம்

செப்டம்பர் 26, 2020 05:58

மும்பை: போதைப் பொருள் பற்றிய வாட்ஸ்ஆப் குரூப்பின் அட்மின் தீபிகா படுகோன் என்ற அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளது. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் காதலி ரியா சக்ரபர்த்தியை தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்.சி.பி.) அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கும் போதைப் பொருளுக்கும் தொடர்பு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து அவரை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளார்கள்.
இதையடுத்து கோவாவில் ஷூட்டிங்கில் இருந்த தீபிகா படுகோன் தன் கணவரும், நடிகருமான ரன்வீர் சிங்குடன் தனி விமானத்தில் மும்பைக்கு வந்தார். இன்று அவர் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்பு ஆஜராகவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது..

இந்நிலையில் தன் மனைவி தீபிகாவுக்கு ஆன்க்சைட்டியாக இருப்பதால் தானும் உடன் வர அனுதிக்க வேண்டும் என்று ரன்வீர் சிங் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்க அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். தீபிகா படுகோன் இன்று விசாரணைக்கு ஆஜராகவிருக்கும் நேரத்தில் போதைப் பொருள் தொடர்பான வாட்ஸ்ஆப் குரூப்பின் அட்மினே அவர் தான் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபலங்களின் மேனேஜரான ஜெயா சாஹா தான் அந்த குரூப்பின் ஓனராம்.

என்.சி.பி. அதிகாரிகள் மூன்று நாட்களாக ஜெயா சாஹாவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்பொழுது தான் ஜெயா அல்ல மாறாக தீபிகா கோனின்  மேனேஜரான கரிஷ்மா தான் பிரபலங்களுக்கு போதைப் பொருள் கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து கரிஷ்மாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இன்று தீபிகா மட்டும் அல்லாமல் நடிகைகள் சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராகவிருக்கிறார்கள். இதற்கிடையே ரகுல் ப்ரீத் சிங் என்.சி.பி. அதிகாரிகள் முன்பு ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது. போதை பொருள் பற்றி பேசியது உண்மை தான் என்று என்.சி.பி. அதிகாரிகள் விசாரணையில் ரகுல் ப்ரீத் ஒப்புக்கொண்டார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்