Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பூமியில் துயில் கொண்டது பாடும் நிலா

செப்டம்பர் 26, 2020 07:17

சென்னை: தாமரைபாக்கத்தில் இசை பிதாமகன் பாடும் நிலா எஸ்.பி.பி.யின் உடல் அரசு மரியாதையும் அடக்கம் செய்யப்பட்டது

செங்குன்றம் அருகே தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி.பி., உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

நேற்று இரவு அவரது உடல் செங்குன்றம் அருகேயுள்ள தாமரைபாக்கத்தில் பண்ணை வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இன்று காலை இயக்குநர் பாரதிராஜா, பின்னணி பாடகர் மனோ உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்களும் ஏராளமான பொது மக்களும் எஸ்பிபி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, அதிகாரிகள், ஆந்திர மாநில அமைச்சர் அனில்குமார் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து, முழு அரசு மரியாதையுடன், 72 குண்டுகள் முழங்க எஸ்பிபி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தலைப்புச்செய்திகள்