Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எஸ்பிபி மறைவிற்கு விஜய் நேரில் அஞ்சலி

செப்டம்பர் 26, 2020 10:19

சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்தநிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது உடல் போலீசார் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன் படி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் காம்தார் நகர் இல்லத்தில் இருந்து தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் எஸ்பிபி அவர்களின் மகன் சரணிடம் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்