Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புனித ஆரோக்கிய மாதா கோவிலில் உண்டியல்கள் உடைப்பு: பணம் திருட்டு

செப்டம்பர் 27, 2020 07:08

கொடைக்கானல்: கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியில் மெயின் சாலையில் உள்ளது புனித ஆரோக்கியமாதா கோவில் இந்த கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெற்றது. இரவில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது திருவிழாவானது 3−நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது கொடியேற்ற விழாவில் கொடைக்கானல் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இந் நிலையில் கோயிலில் உள்ள ஜன்னல் கம்பிகளை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று பீடத்தின் முன் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலுள்ள பணத்தை திருடியுள்ளனர். மேலும் கோயில் வளாகத்தில் கொடி மரம் அருகே உள்ள மற்றொரு உண்டியலையும் உடைத்து அதிலுள்ள பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து வழக்கம் போல காலை கோயிலுக்கு வந்த கோயில் பிள்ளை ஜன்னல் உடைக்கப்பட்டும் கோயில்களில் இருந்த உண்டியல்கள் உடைக்கப்பட்டிருப்பதையும் பார்த்து பங்கு தந்தைக்கு தகவல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பங்குத் தந்தை கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் டி.எஸ்.பி..ஆத்மநாதன், இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று உடைக்கப்பட்ட உண்டியல்களையும் பார்வையிட்டு விசாரனை நடத்தினர். மேலும் கோயில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள படங்கள் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

இரண்டு உண்டியல்களில் மொத்தம் சுமார் ரூ .50 ஆயிரம் இருக்கும் என பங்குத் தந்தை தெரிவித்தார். நல்வாய்ப்பாக திருடர்கள் மாதா கோயிலில் உள்ள சுரூபங்கள் எதையும் சேதப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்