![](admin/uploads/.5d467bc3db9f60.08818157.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூர்: திருப்பூரில் தென்னாடு மக்கள் கட்சியின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு வெள்ளியங்காடு அலுவலகத்தில் நடைபெற்றது திருப்பூரில் தென்னாடு மக்கள் கட்சியின் சார்பில் வெள்ளியங்காடு பகுதியில் ஆலோசனைக் கூட்டம் மாநில பொதுச்செயலாளர் செந்தில் வாண்டையார் தலைமையில் நடைபெற்றது உடன் மாநில அவைத் தலைவர் திருநாவுக்கரசு நாட்டார், மாநில தலைமை நிலைய செயலாளர் கார்த்திகேயன், திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியில் பேசிய மாநில பொதுச்செயலாளர் செந்தில் வாண்டையார் தேவர் குரு பூஜை விழாவில் தமிழக அரசு எவ்வித கட்டுப்பாடுகள் விதிக்க கூடாது தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாய இளைஞர்கள் மீது தொடர்ந்து காவல்துறை பொய் வழக்குகள் பதிவு செய்வதை தென்னாடு மக்கள் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
மேலும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிசன் இல்லாமல் இறந்தவர்கள் அனைவருக்கும் தலா 5 லட்சம் வீதம் வழங்க வேண்டும் மதுரை மாவட்டத்தில் ஒரு சில சமுதாய மக்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் தேவர் என பெயர் குறிப்பிட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால் சமுதாய கலவரம் ஏற்படும். இது போன்ற போஸ்டர்கள் ஒட்டும் நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு செந்தில் வாண்டையார் தெரிவித்தார்