![](admin/uploads/.6051e648b29db8.70413353.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில், மத்திய அரசின், புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும், அதற்கு துணைபோகும் மாநில அரசை கண்டித்தும், சர்வகட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் தி.மு.க. வர்த்தக அணி மாநில இணைச் செயலாளர் கிரகாம்பெல் தலைமையில், நடைபெற்றது.
மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள, மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வள்ளியூரில், தோழமைக் கட்சிகளுடன், தி.மு.க. வர்த்தக அணியினர், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், வள்ளியூர் பேரூர் தி.மு.க. செயலாளர் சேதுராமலிங்கம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆதிபரமேஸ்வரன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஞானராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர் சேவியர், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் தவசிராஜன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் ஜாவித், நகர காங்கிரஸ் செயலாளர் சீராக் இசக்கியப்பன், ம.தி.மு.க. வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்பாண்டியன், நகரச் செயலாளர் வெள்ளபாண்டி, களக்காடு ஒன்றிய முன்னாள் செயலாளர் ஜாண்சன்துரை, கம்யூனிஸ்ட் நகர செயலாளர் வேம்பு சுப்பையா, வி.சி.க. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் உட்பட, பலர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பினர்.