![](admin/uploads/.5ee9bd9d2d3336.45884781.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (50). கூலி தொழிலாளி. இவர் நேற்று வீரவநல்லூர் பாரதிநகர் பகுதியில் கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குழி தோண்டியபோது மின்சார கேபிள் மீது எதிர்பாராதவிதமாக கடப்பாரை கம்பியால் குத்தினார். இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.