![](admin/uploads/.619de1421c8727.44657492.gif)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு எழுதுபவர்களுக்கு வசதியாக சென்னை மெட்ரோ ரெயில் சேவை நாளை காலை 6 மணி முதல் இயக்கப்படுகிறது. இது குறித்து மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நாளை மட்டும் மெட்ரோ ரெயில் சேவை காலை 6 மணி முதல் இயக்கப்படுகிறது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி தேர்வு) நடத்தும் தேர்வை எழுதுபவர்களுக்கு வசதியாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தனது மெட்ரோ ரெயில் சேவைகளை நாளை (அக்டோபர் 4ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு பதிலாக காலை 6 மணி முதல் தொடங்க உள்ளது. மெட்ரோ ரெயில் சேவைகள் நாளை முழுவதும் உச்ச நேரம் (பீக் ஹவர்ஸ்) இல்லாமல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது