![](admin/uploads/.60464590ed5849.99803348.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
வேதாரண்யம்:கருப்பம்புலம் ஊராட்சியின் வரவு செலவு அறிக்கை துண்டு பிரசுரமாக வீடு, வீடாக விநியோகம் செய்த ஊராட்சிமன்றத் தலைவரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக சுப்புராமன் வெற்றிபெற்றார். பதவியேற்ற பிறகு கட்டிட பராமரிப்பு, குடிநீர், மின்சாரம் என சுறுசுறுப்பாக இயங்கிய சுப்புராமன் தற்போது வரவு செலவு கணக்கை வெளிப்படையாக ஊர் மக்களுக்குத் தெரிவித்துள்ளார்
கடந்த 9 மாத வரவுசெலவு கணக்கை நோட்டீசாக அச்சடித்து வீடு வீடாக என்று வழங்கி வருகிறார். பல பஞ்சாயத்துக்களில் என்ன நடக்கிறது என்றே மக்களுக்கு தெரியாத நிலையில் கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் மற்ற ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார் என்பதில் ஐயமில்லை.