Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சையில் மகளிர் ஆர்ப்பாட்டம் 

அக்டோபர் 05, 2020 10:33

தஞ்சாவூர்: உத்தரபிரதேசத்தில் தலித் பெண் பாலியல் கொடுமை செய்து கொலை செய்ததற்கு கண்டனம் தெரிவித்து தஞ்சையில் திராவிடர் கழக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன் உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து தஞ்சையில் திராவிட கழக மகளிரணி மாவட்ட தலைவி கலைச்செல்வி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத உத்தர பிரதேச அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகள் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதனால் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்