![](admin/uploads/.606e9cceaae5e4.65109233.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அம்பத்தூர்: அம்பத்தூரில் பைனான்சியர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் கத்தி முனையில் பணம், செல்போன் கொள்ளையடித்தது சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அம்பத்தூர் அடுத்த பாடி முகப்பேர் சாலையில் வசிக்கும் சரவணன் என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டில் நுழைந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சரவணனை கேட்டு அவரது வீட்டில் இருந்த பாலகிருஷ்ணனை கத்தி முனையில் மிரட்டி கைகளால் தாக்கி வீட்டில் இருந்த 40 ஆயிரம் பணம் 4 செல்போனை பறித்து சென்றுள்ளனர்.
இதில், காயமடைந்த பாலகிருஷ்ணன் சம்பவம் குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அம்பத்தூரில் பைனான்சியர் ஒருவர் வீட்டில் நுழைந்து கத்தி முனையில் மிரட்டி பணம் பொருள் கொள்ளையடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.