Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலிபுரம் ஒன்றியம் வெங்கடாசலபுரம் ஊராட்சியில் ஒரு கோடி மதிப்பில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் 25 சென்ட் நிலப்பரப்பில் கட்டப்பட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துறையூர் தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், ஒன்றியக்குழு தலைவர் ஹேமலதா முத்துச்செல்வன், ஊராட்சி மன்ற தலைவர் லதா தனபால், தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன், மதுரை கோட்ட தீயணைப்பு உதவி இயக்குனர் சரவணகுமார், புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.