![](admin/uploads/.609d5e74d9de38.95745891.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: திருச்சி மாநகர் மாவட்டம் அரியமங்கலம் மண்டல் சார்பாக அரியமங்கலம் பேருந்து நிலையத்தில் ராம. கோபாலனுக்கு சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி துவாக்குடி அருகிலுள்ள எஸ்.ஐ.டி.யிலிருந்து அரியமங்கலம் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்ட மண்டல கிளைகமிட்டி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மனோஜ் குமார் தலைமை வகித்தார். ராஜசேகர் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் மாவட்ட செயலாளர் முன்னிலை வகித்தனர். லோகேஷ்வரன், சந்தோஷ், தமிழ்வாணன், காசிநாதன், முருகானந்தம் அரியமங்கலம் மண்டல செயலாளர்கள் உள்ளிட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.