Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திய மாணவர் சங்கம் தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

அக்டோபர் 06, 2020 11:56

தஞ்சை: உ.பி.யில் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் தஞ்சையில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் அரவிந்தன் தலைமையில் மாணவர் சங்கத்தினர் பெண்கள் போல சேலை கட்டி வேடம் அணிந்து முள்வேலி அணிந்து உடம்பு பகுதிகளில் இரும்பு தகடுகளை பொறுத்தி தஞ்சை ரயில் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். உ.பி.யில் பெண்ணை வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.

தலைப்புச்செய்திகள்