Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஆவடி: ஆவடியில் சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சிறு கடைகளை அகற்றி போக்குவரத்து இடையூறுகளை சீரமைக்கும் பணிகளில் போக்குவரத்து காவல் துறையினர் ஈடுப்பட்டதால் நடைபாதை வியாபாரிகள் பாதிப்படைந்தனர்.
சென்னை ஆவடி மார்கெட் பகுதியில் நடைபாதை கடைகளின் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்ததால் போக்குவரத்து காவல் ஆய்வாளர் எடிசன் சாந்தகுமார் தலைமையில் சாலையோர கடைகளை அகற்றும்பணியில் ஈடுப்பட்டனர்.
இதில், நகராட்சி மற்றும் மாநில நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளும் இணைந்து சாலையை ஆக்கிரமித்திருந்த கடைகளை அகற்றினர். சுமார் 200 மீட்டர் தூரம் வரை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதனால் போக்குவரத்து இடையூறு இல்லாமல் வாகனம் செல்ல வழிவகை செய்யப்பட்டது. ஆனால், கொரோனா காலத்தில் வருவாய் இன்றி தவித்து வந்த சிறு வியாபாரிகளை அகற்றியதால் மிகுந்த வேதனையடைந்தனர்.