Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உ.பி.யில் ராகுல் காந்தி கைது கண்டித்து திருநெல்வேலியில் காங். ஆர்ப்பாட்டம்

அக்டோபர் 07, 2020 04:54

திருநெல்வேலி: உ.பி.யில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினர்,  சத்யாகிரக அறவழிப் போராட்டம்  நடத்தினர்.
அண்மையில் உ.பி.மாநிலத்தில், தலித் இனத்தைச் சேர்ந்த மனீஷா வால்மீகி என்ற இளம்பெண், சமூக விரோதிகள் சிலரால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து, நேரில் விசாரித்து அறிவதற்காக,  பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை,  நேரில் சந்தித்துப் பேசுவதற்காக, உ.பி.மாநிலம் சென்ற, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை,  தடுத்தி நிறுத்தி, அவமானப் படுத்தி, கீழே தள்ளி, உ.பி. காவல்துறையினர் கைது செய்தனர்.

இதை கண்டித்தும்,  இந்த சம்பவம் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையினையும் எடுக்காத, மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் வழிகாட்டுதல்படி,  திருநெல்வேலி வண்ணாரபேட்டையில் உள்ள, மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பாக, காங்கிரஸ் கட்சியின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.சங்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த சத்யாகிரக அறவழிப் போராட்டத்தில், திரளானோர் கலந்து கொண்டு, மத்திய அரசு மற்றும் உ.பி.அரசு ஆகியவற்றிற்கு எதிராக, கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தின் போது, மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவுக்கும், கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்