Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிய தமிழகம் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

அக்டோபர் 07, 2020 05:17

பழனி: தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள தேவேந்திரர் சமுதாயத்தை  தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவித்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தாழ்த்தப்பட்டோருக்கான பட்டியலில் உள்ள தேவேந்திரர் சமுதாயத்தை தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்கவேண்டும் என்றும், தாழ்த்தப்பட்ட பிரிவில் இருந்து நீக்கி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர் முனியப்பன் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்