![](admin/uploads/.5f69dd3ef016d0.36280776.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னை வேளச்சேரியில் சூர்யா அறக்கட்டளை சார்பாக தினந்தோறும் வீட்டுக்கு 25 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க மூன்று லாரிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவங்கி வைத்தனர்.
சென்னை வேளச்சேரியில் அ.தி.மு.க. பகுதி கழகம் மற்றும் சூர்யா அறக்கட்டளை சார்பில் வேளச்சேரி பகுதி கழக செயலாளர் மூர்த்தி தலைமையில் பொது மக்களுக்கு 3,000 குடங்கள் மற்றும் மூன்று தண்ணீர் லாரிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்காக தென்சென்னை மாவட்ட செயலாளரும், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான வி.என்.ரவி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தினந்தோறும் வீடு ஒன்றிற்கு 25 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.