![](admin/uploads/.60f90d47c622b7.10718285.jpg)
Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூர்: ''தி.மு.க.விற்கு சாவு மணி அடிக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க வேண்டும்,'' என திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ குணசேகரன் தெரிவித்தார். அ.தி.மு.க. கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை வரவேற்று திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏ. குணசேகரன் பேசியதாவது:
இரட்டை இலை சின்னம் போல ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ். இருவரும் இருந்து கழகத்தை வழிநடத்த வேண்டும். சோதனைகளை சாதனைகளாக மாற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.விற்கு சாவு மணி அடிக்கும் விதத்தில் இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.