Sunday, 29th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: ''சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் முககவசம் அணியாதவர்கள் மீது கருணை காட்டக்கூடாது,'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
முகக்கவசம் அணியாதவர்களை ஏன் கைது செய்யக்கூடாது? என்று சென்னை ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அது நல்ல கேள்வி. அருமையான யோசனை. கொரோனா பரவலைத் தடுக்க ஒத்துழைக்காதவர்களுக்கு கண்டிப்பாக பாடம் புகட்டப்பட வேண்டும்.
கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணியும்படி உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பிரதமரும், முதல்வரும் கூறுகின்றனர். விழிப்புணர்வு விளம்பரங்கள் வெளியாகின்றன. நானும் அறிவுறுத்தி வருகிறேன். இவ்வளவுக்கு பிறகும் திருந்தாமல் செயல்படுவது குற்றம் அல்லவா?.
சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 90 சதவீத மக்கள் முகக்கவசம் அணிவதில்லை என்று ஆணையரே கூறுகிறார். அதன்பிறகும் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதில் என்ன தயக்கம்?. விதிகளை மதிக்காமல் கொரோனாவை பரப்புவோர் மீது கருணை காட்டக்கூடாது. இவ்வாறு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.