![](admin/uploads/.5f795e09d58230.02708019.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு கருவூல கணக்குத் துறையில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு குறைபாடுகளுடன் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை திட்டத்தை தனியார் நிறுவனம் வழியாக செயல்படுத்துவதை கண்டித்தும், கருவூலத்துறை தனியார் மயமாகி இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு கைவிட கோரி வேதாரணியம் சார்நிலைக் கருவூலம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.