![](admin/uploads/.5cecca49559071.00764370.gif)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மன்னார்குடி: ''அ.தி.மு.க. இன்னும் 100 ஆண்டுகாலம் ஆட்சியில் இருக்கும் என உறுதி ஏற்றுள்ளோம்,'' என மன்னார்குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
அ.தி.மு.க. தலைமை கழகம் கட்சியின் செயல்பாடுகளை கவனித்து கொள்ள 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைத்தது. அதில் இடம் பெற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு வருகை தந்த தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெற்கு வீதியில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைக்கு தொண்டர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதில் மாவட்டம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சாதாரண ஏழை, எளிய மக்கள் அ.தி.மு.க.வை நம்பியுள்ளார்கள். மூன்றாவது முறையாக 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும். இந்த இயக்கம் இயக்க தொண்டர்கள் இணைந்து அம்மாவின் கனவை நினைவாக்கும் வகையில் இன்னும் 100 ஆண்டுகாலம் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும் என உறுதியை ஏற்றுள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.