Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர்: 2 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது பாதுகாப்பு படை

அக்டோபர் 10, 2020 06:18

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டம், சிங்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று அதிகாலையில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் அடங்கிய கூட்டுப் படையினர் அப்பகுதியை முற்றுகையிட்டு, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இத்தகவலை காஷ்மீர் மண்டல காவல்துறை உறுதிப்படுத்தி உள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.
 

தலைப்புச்செய்திகள்