![](admin/uploads/.5ef8b8193526b4.70918705.gif)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னையில் மனைவி மீதான சந்தேகத்தால் மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு, கணவரும் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் வசித்து வரும் தம்பதியர் நாராயணன்(70) மணோன்மணி(48) இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு சண்டையிட்டு வருவது வழக்கம்.
மனைவி நடத்தையின் மீது சந்தேகப்பட்டு சண்டையிட்டு வந்த கணவர் நேற்றுமுன்தினம் ஆத்திரத்தில் தலையில் கல்லைப்போட்டு கொன்றுவிட்டு, மனைவி இறந்து விட்டதால் எங்கு நாம் மாட்டிக் கொள்வோமோ என எண்ணி வீட்டிலேயே அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே இவர்கள் நீண்ட நேரமாக வராததால் சந்தேகமடைந்த அருகில் உள்ள மக்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது இருவரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
நிகழ்விடத்திற்கு வந்த செம்மஞ்சேரி போலீசார் கணவன், மனைவி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.