![](admin/uploads/.60a362c297eff6.11994599.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை : சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் மூங்கிலேரி பகுதில் வாகனத்தில் சென்றவரிடம் கத்தி காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளி தப்பி ஒடி தலைமறைவானார்.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதிகளில் இரவு நேரங்களில் செல்லும் பொது மக்களிடம் வழிப்பறியில் ஒரு கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது. அதே போல் நேற்றுமுன்தினம் இரவு பம்மல் மூங்கிலேரி பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் கத்தியை காட்டி அவரிடம் இருந்த பணத்தை அடித்து பறித்ததோடு செல்போனை பறிக்க அந்த கும்பல் முயற்சித்துள்ளது. அந்த வழிப்பறி கும்பலிடம் இருந்து ஒரு வழியாக தப்பித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சங்கர் நகர் காவல்துறையினர் அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்த போது அதில் பல குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளி மதன் என்பது தெரியவந்தது..
அதே போல் சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து பம்மல் பகுதியை சேர்ந்த சூர்யா(20), .உதயகுமார் (22) மற்றும் சரவணன் (21) என்ற மூன்று குற்றவாளிகளை சங்கர் நகர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான முக்கிய குற்றவாளி மதன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.