Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புஷ்பவனம் கொலை வழக்கு: 3 பேர் சிறையில் அடைப்பு

அக்டோபர் 11, 2020 08:26

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே மதுவாங்கி வர மறுத்த தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனத்தில் மது வாங்கி வர மறுத்ததால் கோவில் முன் சிவசங்கரன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் முருகையன் அவரது மகன் காஞ்சியப்பன் ஆகியோர் வேதாரண்யம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கொலை வழக்கு தொடர்பாக அருள்அழகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கொலை வழக்கில் தொடர்புடைய முருகையன், காஞ்சியப்பன், அருள்அழகன் ஆகியோரை வரும் 23ம் தேதி வரை சீர்காழி சிறையிலடைக்க நீதிபதி லிசி உத்தரவிட்டார்.

தலைப்புச்செய்திகள்