![](admin/uploads/.636cd490d0a935.03911946.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுச்சேரி: புதுச்சேரியில் வீட்டு மாடியில் தூங்கிக்கொண்டிருந்த ஓய்வு பெற்ற ஜிப்மர் ஊழியரான 74 வயது முதியவரை மர்ம நபர்கள் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பம் காக்காயன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(74). ஓய்வு பெற்ற ஜிப்மர் ஊழியரான இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாத்தால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது வீட்டு மாடியில் சுப்ரமணி கழுத்து அறுக்கபட்டு கொலை செய்யபட்டுகிடந்தார்.
உடனடியாக இதுகுறித்து அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்தவுடன் அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுப்பிரமணி, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இது அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே இவரது வீட்டில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எனவே, பணத்திற்காக இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.