![](admin/uploads/.60c0abb1d3a2a0.87562824.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் நடமாடும் நியாய விலைக்கடை துவக்க விழா நடைபெற்றது. திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய இரு மாவட்டங்களையும் உள்ளடக்கியுள்ள, ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில், கூட்டுறவு துறையின் கீழ், மொத்தம் 110 அம்மா நடமாடும் நியாயவிலைக் கடைகளைத் திறந்திட, திருநெல்வேலி கூட்டுறவு துறை திட்டமிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், சேரன்மகாதேவி பேரூராட்சி பகுதியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் சார்பில், கூனியூர் அம்பேத்கர் காலனியில், அம்மா நடமாடும் நியாய விலை கடை திறக்கப்பட்டது. சேரன்மகாதேவி நகர, அ.தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் பழனிக்குமார் தலைமையில், அ.தி.மு.க. இலக்கிய அணி பொறுப்பாளர் கூனியூர் மாடசாமி, கொடி அசைத்து வைத்தார். காலை 9 மணி முதல், மாலை 6 மணிவரை, இந்த கடைகள் செயல்படும் என, கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.
துவக்கவிழா நிகழ்ச்சியில், சேரன்மகாதேவி கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் நயினார், துணைத் தலைவர் மாரிமுத்து, ஒன்றியச் செயலாளர் கருத்த பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுபோல சுத்தமல்லி ராஜீவ் நகரிலும், அம்மா நகரும் நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது.