Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பேரிடர் கால மீட்பு பணிகள்: பெரியகுளத்தில் ஆலோசனை

அக்டோபர் 12, 2020 11:53

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பேரிடர்  கால மீட்பு பணிகளை மேற்கொள்வது பற்றி தீயணைப்பு அலுவலர் பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தீயணைப்பு அலுவலர் பழனிச்சாமி தலைமையில் நகரில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் பெரியகுளம் நகரில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பேரிடர்  கால மீட்பு பணிகளை மேற்கொள்வது பற்றி பெரியகுளம் தன்னார்வலர்கள் மற்றும் பசுமையின் தோழர்கள் அமைப்பினை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் பேரிடர் காலத்தில் அனைத்து வகையிலும் உதவுவதற்கு தயாராக உள்ளதாக பசுமையின் அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்கள் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமியிடம் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்