Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜல்லிக்கட்டு காளை முட்டி வாலிபர் பரிதாப சாவு

அக்டோபர் 12, 2020 11:54

மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் அருகே நாகப்பன்பட்டி வினோபா காலனியில் உள்ள வயல்வெளியில்வ நேற்று காலை இளைஞர்கள் சிலர் வடமாடு  மஞ்சுவிரட்டு பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர்.

அழகர் கோயில் அருகே உள்ள அழகாபுரியைச் சேர்ந்த எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தவர் ரமேஷ். இவருக்கு வயது 23. நண்பர்களுடன் இணைந்து ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக காலை ரமேஷின் இடுப்பு விலாப்பகுதியில் முட்டித் தள்ளியது. இதில் அவரது குடல் சரிந்தது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து மேலூர் போலீஸ் காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்