![](admin/uploads/.64e84a96b74136.73045689.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை: மதுரையில் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட இருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் வரிச்சூர் அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரான கிருஷ்ணன் என்பவர் நேற்றுமுன்தினம் இரவு அந்த ஊரில் உள்ள மலை அருகே இரவு பேசிக் கொண்டிருந்துள்ளார். அதிகாலை வரை வீட்டிற்கு வராமல் இருந்ததை அறிந்த உறவினர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பார்த்தபோது கிருஷ்ணன் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கீழே கிடந்துள்ளார். மேலும் அதே ஊரை சேர்ந்த எலெக்ட்ரீசியனான முனியசாமி என்பவரும் படுகொலை செய்யப்பட்ட கிடந்துள்ளார். இருவரும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் கருப்பாயூரணி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்த மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரி உடலை எடுக்க கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே ஊராட்சி மன்ற தலைவர் கொலை குற்றவாளிகளை கருப்பாயூரணி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சமீபத்தில் திருவாருர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் மதுரையில் ஒரு ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஊராட்சி மன்ற தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.