![](admin/uploads/.5ef0ac1f6f72d5.68475732.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை: கோவை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞர்கள் மினி டெம்போவில் மோதி சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்து நரசிபுரம் அருகே கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (19), பாபு (20), ஆனந்த் (19) ஆகிய மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் நரசிபுரம் சென்றுள்ளனர். நரசிபுரம் அருகே வந்தபோது, எதிரே வந்த மினி டெம்போவில் நேருக்கு நேர் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே கார்த்திக், பாபு உயிரிழந்தனர்.
பலத்த காயங்களுடன் கிடந்த ஆனந்தை, பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு வழி சாலை என்ற போதும், இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் இடதுபுறம் செல்லாமல், வலதுபுறம் ஏறி வந்ததாலும், அதிவேகத்தில் நிலைத்தடுமாறி வந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறும் காவல்துறையினர், மூவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனையில் தான் உறுதி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர்.