![](admin/uploads/.61593c7875af29.59877881.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தூத்துக்குடி: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தமிழகத்தைச் சேர்ந்த 83 வயதான இயேசு சபையைச் சேர்ந்த அருட்பணியாளர் ஸ்டேன் சுவாமியை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்து மும்பையில் சிறை வைத்துள்ளதை கண்டித்தும் ஸ்டேன் சுவாமி மற்றும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி தூத்துக்குடியில் இயேசு சபை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சியில் மலைவாழ் மக்களின் உரிமைக்காக போராடிய தமிழகத்தை சேர்ந்த இயேசு சபையை சேர்ந்த 83 வயது அருட்பணியாளர் ஸ்டேன் சுவாமியை தேசிய புலனாய்வு அமைப்பினர் ராஞ்சியில் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்தும் ஸ்டேன் சுவாமியை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடியில் உள்ள இயேசு சபை சார்பில் தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அருட்திரு ஸ்டேன் சுவாமியை கைது செய்த மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் இல்லையென்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இயேசு சபையினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.