Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஞ்சிபுரத்தில் கனமழை: மகிழ்ச்சியில் விவசாயிகள் 

அக்டோபர் 13, 2020 08:28

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று கன மழை பெய்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலைப் பொழுதுகளில் மழை பெய்து வருகின்றது. நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் பலத்த காற்றுடன் இடி மின்னல்களுடன் மழை பெய்தது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான செவிலிமேடு, ஓரிக்கை, குருவிமலை, வெள்ளைகேட், பொன்னேரிகரை, வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது.

பகல் நேரங்களில் மழை பெய்யாமல் மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே மழை பெய்து வருகின்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகின்றதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  பல்வேறு தாழ்வான இடங்களில் மழை நீர் சாலைகளில் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளில் கடும் அவதிக்குள்ளாகியுள்னர்.

தலைப்புச்செய்திகள்