Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருக்கு அரிவாள் வெட்டு: சென்னையில் பரபரப்பு

அக்டோபர் 14, 2020 08:18

சென்னை: சென்னை தி.மு.க. பிரமுகரும் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான கே.கே. நகர் தனசேகரன் பட்டப்பகலில் தி.மு.க. அலுவலகத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்சென்னை தி.மு.க.வின் முக்கிய பிரமுகராக இருப்பவர் கே.கே.நகர் தனசேகர். சென்னையில் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியவர். தி.மு.க. கவுன்சிலராக இருந்த தனசேகரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்.

சென்னை கே.கே.நகர் தி.மு.க. மகளிரணி பிரமுகர் பால்மலர் கொலை வழக்கில் தனசேகரனுக்கும் தொடர்பிருப்பதாகவும் அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. அண்மையில் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக தனசேகரன் நியமிக்கப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் சென்னையில் கே.கே.நகர் பகுதி தி.மு.க. அலுவலகத்தில் தனசேகரன் அமர்ந்திருந்தார். அப்போது அரிவாள் சகிதமாக உள்ளே நுழைந்த மர்ம நபர் அமுதா என்ற பணிப்பெண்ணை சரமாரியாக வெட்டி இருக்கிறார். 

இதை தடுக்க முயன்ற தனசேகரனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் தலை மற்றும் பல இடங்களில் வெட்டுப்பட்டு பலத்த காயமடைந்த தனசேகரன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை கேள்விபட்ட தனசேகரன் ஆதரவாளர்கள் அந்த தனியார் மருத்துவமனை முன் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதனிடையே கே.கே.நகர் தனசேகரனை அரிவாளால் வெட்டியதாக 2 பேரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். 

தி.மு.க. பிரமுகரும் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்